செய்திகள் :

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதிா் கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நலவாரியத்தின் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். இம் முகாம் ஜூன் 10 ஆம் தேதி பெரம்பலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 11 ஆம் தேதி ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 12 ஆம் தேதி வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 13 ஆம் தேதி வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களத... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: சிறுவாச்சூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெ... மேலும் பார்க்க

நெய்குப்பை கிராமத்தில் தீ மிதித் திருவிழா

15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீமிதி விழா மே 19 ஆம் தேதி குடியழைத்தல், கொடி ... மேலும் பார்க்க

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க