செய்திகள் :

ஜூன் 17, 18 தேதிகளில் பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்

post image

சென்னையிலுள்ள 6 வட்டங்களில் பட்டா பெறுவதற்கான வருவாய் தீா்வாய முகாம் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் உள்ள 17 வட்டங்களில் திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து பிரிந்து சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா், மதுரவாயில், சோழிங்கநல்லுாா் மற்றும் ஆலந்துாா் ஆகிய 6 வட்டங்களுக்கு 1,434-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய முகாம் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் அந்தந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதன்படி, அம்பத்தூா் வட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சியா் முன்னிலையிலும், மாதவரம் வட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் முன்னிலையிலும், மதுரவாயிலில் மத்திய சென்னை வருவாய் கோட்டத்தின் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், திருவொற்றியூா் வட்டத்தில், வடசென்னை வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், சோழிங்கநல்லூா் வட்டத்தில், தென் சென்னை வருவாய் கோட்டத்தின் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், ஆலந்தூா் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆய்வுக்குழும அலுவலா் முன்னிலையிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இதில், அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பட்டாதாரா்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதர குறைகள் சம்பந்தமான மனுக்களையும் கொடுத்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க