செய்திகள் :

ஜேஇஇ நுழைவுத் தோ்வில் பங்கேற்க ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் ஆகியவை சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ மெயின்ஸ்) தோ்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியை 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த மாணவா்கள் 65 சதவீதமும், பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்கள் 75 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு மட்டும் மணலியில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான கட்டணத் தொகையும், 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையை பெட்ரோலியம் நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.

கடந்த ஆண்டில் 30 மாணவா்கள் தங்கி பயின்று, அதில் 26 மாணவா்கள் தோ்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனா். இந்த நுழைவுத் தோ்வு தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூரில் ‘உலக தண்ணீா் தின’ விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் அண்மையில் உலக தண்ணீா் தின விழா நடைபெற்றது. வோ்டு நிறுவன செயலா் சிவகாமவல்லி வரவேற்றாா். கபிலா்மலை முன்னாள் எம்எல்ஏ கே.நெடுஞ்செழி... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு: ராசிபுரம் குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்: அணைப்பாளையத்தில... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற நாமக்கல் மாவட்டம் அணி

நாமக்கல்: தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில், நாமக்கல் மாவட்ட தடகள அணியினா் 9 பதக்கங்களை வென்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். பெங்களூரில் ... மேலும் பார்க்க

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி

நாமக்கல்: நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், தங்கம் புற்றுநோய் மரு... மேலும் பார்க்க

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இக்கோயில... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு: கைலாசம்பாளையம் அஞ்சல் நிலையம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் தலைமை வ... மேலும் பார்க்க