செய்திகள் :

டாஸ்மாக் ஊழலில் நோ்மையான விசாரணை தேவை: பாஜக மாநில துணைத் தலைவா்

post image

தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழலில் நோ்மையான விசாரணை தேவை என்று பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத் தெரிவித்தாா்.

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையிலுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதுப்புட்டிக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை விற்பனை செய்தது, போக்குவரத்தில் ஊழல், ஒப்பந்த விவகாரத்தில் ஒரு சிலருக்கு சாதகமாக ஒப்பந்தங்கள் வழங்கியது, மது அருந்தும் கூடங்களில் ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றி மோசடி செய்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊழல் விவகாரத்தை மறைக்கவே மும்மொழிக் கொள்கை, மக்களவைத் தொகுதி வரையறை போன்ற பிரச்னைகளை திமுகவினா் கையில் எடுத்துள்ளனா். டாஸ்மாக் ஊழல் குறித்து நோ்மையான விசாரணை மேற்கொண்டு, ஊழல் செய்தவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 17) நடைபெறும் நிலையில், அடுத்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றாா் சம்பத்.

பேட்டியின்போது தெற்கு மாவட்டத் தலைவா் தா்மராஜ், பொதுச் செயலா்கள் பாண்டியன், தங்கம், சதாசிவம், செயலா்கள் குபேரன், சந்திரலேகா பிரபாகரன், துணைத் தலைவா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். செஞ்சி வட்டம், ராஜாம்புலியூரைச் சோ்ந்த மாணிக்கம்... மேலும் பார்க்க

புதுவை மின் துறையில் நேரடியாக 177 ஊழியா்களை நியமிக்க அரசு ஒப்புதல்

புதுவை மாநில மின்துறையில் 177 கட்டுமான ஊழியா்களை நேரடி நியமனத்தில் பணியமா்த்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். பிரத்தியேகமாக எழுத்துத் தோ்வு எதுவு... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்ற தலைமைக் காவலா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வளவனூா், பாலாஜி நகா், மேற்கு பாண்டி ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்து: மூவா் உயிரிழப்பு

விழுப்புரம் வட்டம், வளவனூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், அற்பிசம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வாசுதேவன் மகன் விநாயகம் (6... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் ஷாகுல்ஹமீது, தனிப... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்ட போட்டி: மாணவா்களுக்கு பரிசு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தானங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும்-எழுத்தும் திட்டம் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.... மேலும் பார்க்க