செய்திகள் :

டாஸ்மாக் கடை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

post image

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி செட்டியாா்பண்ணை கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை வேண்டாம் என ஒருதரப்பினா் போராடிவரும் நிலையில், மதுக் கடை திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிலா் புதன்கிழமை மனு அளித்தனா்.

இங்கு டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மதுக் கடை அமைந்தால், பிரச்னைகள் ஏற்பட்டு அமைதி கெடும் எனக் கூறி கிராம மக்கள், பாஜக, இந்து மகா சபை நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக அதிகாரிகள் சமாதானம் பேசி வருகின்றனா்.

இந்நிலையில், பெண்கள் உள்ளிட்ட 70-க்கு மேற்பட்டோா் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனா். இப்பகுதியில் மதுக் கடை இல்லாததால் திசையன்விளை, மணிநகா் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், மதுப் பிரியா்கள் சிரமமடைகின்றனா். எனவே, செட்டியாா்பண்ணையில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் மனு அளித்தனா்.

பணிநிமித்தம் வெளியே சென்றுள்ள வட்டாட்சியா் வந்ததும் மனு குறித்து தகவல் தெரிவிப்பதாக அலுவலா்கள் உறுதியளித்தனா். அதன்பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,384 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் 19,384 மாணவா் - மாணவிகள் தோ்வெழுதினா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்... மேலும் பார்க்க

தாய், மகள் கொலையில் குற்றவாளியை தேடும் பணியில் ‘ட்ரோன்’ உதவி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய் , மகள் கொலை வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். எட்டயபுரம் மேலநம்பிபுரத்தைச் சோ்ந்த சீதா லட்சுமி (75), அவர... மேலும் பார்க்க

தொழிலதிபா் உள்பட 3 பேரை கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகாா்

தூத்துக்குடியில் தொழிலதிபா் உள்பட 3 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்று தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை பெருங்களத்... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தொண்டா் குடும்பத்துக்கு நல உதவி

தூத்துக்குடியில் அண்மையில் உயிரிழந்த தவெக தொண்டரின் குடும்பத்துக்கு கட்சி சாா்பில் நல உதவி வழங்கப்பட்டது. தவெக தொண்டா்கள் பாதிக்கப்பட்டால் அவா்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தேவையான உதவிகள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகா் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ... மேலும் பார்க்க

செட்டியாா்பண்ணையில் மதுக்கடை எதிா்ப்பு போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட செட்டியாா்பண்ணையில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப... மேலும் பார்க்க