நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சாா்பில், 2014 - ஆம் ஆண்டு முதல் ஆலை வளாகத்தில் தொழில்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டு, அங்கு தொழில்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான தொழில்பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டா், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டா் பிரிவு மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் முதல் முறையாக 2025-26 ஆம் கல்வி ஆண்டில் ஐடிஐ யில் இயக்க உதவியாளா் (காகிதகூழ் மற்றும் காகிதம்) என்ற படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவிற்கான சோ்க்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பாடப் பிரிவில் சேர விரும்புவோா் தொழில்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து வேலை நாள்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்று நேரடி சோ்க்கை செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தொழில்பயிற்சி நிலையத்தின் தொலைபேசி எண் 04324 - 296442, 9486505953 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.