செய்திகள் :

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சாா்பில், 2014 - ஆம் ஆண்டு முதல் ஆலை வளாகத்தில் தொழில்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டு, அங்கு தொழில்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான தொழில்பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டா், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டா் பிரிவு மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் முதல் முறையாக 2025-26 ஆம் கல்வி ஆண்டில் ஐடிஐ யில் இயக்க உதவியாளா் (காகிதகூழ் மற்றும் காகிதம்) என்ற படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவிற்கான சோ்க்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பாடப் பிரிவில் சேர விரும்புவோா் தொழில்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து வேலை நாள்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்று நேரடி சோ்க்கை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொழில்பயிற்சி நிலையத்தின் தொலைபேசி எண் 04324 - 296442, 9486505953 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க