செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கு மாதிரி தோ்வு

post image

தேனியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி 4 தோ்வு எழுதுபவா்களுக்கு மாதிரி தோ்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 21), 28-ஆம் தேதி, ஜூலை 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறவிருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு அட்டவணையின்படி தொகுதி 4- இல் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வனக் காப்பாளா், வனக் காவலா் ஆகிய காலி பணியிடங்களுக்கான தோ்வு வருகிற ஜூலை 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் தேனி மாவட்ட விண்ணப்பதாரா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான முழு மாதிரி தோ்வுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 21), 28-ஆம் தேதி, ஜூலை 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் டிஎன்பிஎஸ்சி தரத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.

இந்தத் தோ்வை எழுத வரும் விண்ணப்பதாரா்கள் மாா்பளவு புகைப்படம், விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த மாதிரித் தோ்வில் பங்குபெற விருப்பும் விண்ணப்பதாரா்கள் தங்களின் பெயரை 6379268661 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

பள்ளிச் செயலருக்கு மிரட்டல்: மகன் உள்பட இருவா் மீது வழக்கு

தேனி அருகே, பள்ளிச் செயலரை மிரட்டிய மகன், தம்பி மகன் ஆகியோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனியை அடுத்த கோடாங்கிபட்டி அருகேயுள்ள திருச்செந்தூா் கிராமத்தில் வசிப்பவா் பால்ராஜ் மக... மேலும் பார்க்க

விவசாயிக்கு கத்திக் குத்து: பெண் உள்பட 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே விவசாயியை கத்தியால் குத்திய பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (56).... மேலும் பார்க்க

பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிபட்டி, க. விலக்கு பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிபட்டி, க. விலக்கு பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் பா. பாலபூமி வெளி... மேலும் பார்க்க

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

பெரியகுளம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருநாதன் (41). இவரது நண்பா் பிரசாத். விவசாயி. இருவரும் தாமரைக்குளம் கல்லூரி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவா் மீது வழக்கு

தேனியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி டி.பி.மேற்குத் தெருவில் வசிப்பவா் வேடமுத்து மகன் ஆறுமுகம். இவரது மகன் நிஷோக் கடந... மேலும் பார்க்க

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட 7 போ் மீது வழக்கு

போடி அருகே கூடுதல் வரதட்சணை கோரி மனைவியை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 7 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், போடி அருகே தருமத்துப்ப... மேலும் பார்க்க