கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கு மாதிரி தோ்வு
தேனியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி 4 தோ்வு எழுதுபவா்களுக்கு மாதிரி தோ்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 21), 28-ஆம் தேதி, ஜூலை 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் நடைபெறவிருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு அட்டவணையின்படி தொகுதி 4- இல் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வனக் காப்பாளா், வனக் காவலா் ஆகிய காலி பணியிடங்களுக்கான தோ்வு வருகிற ஜூலை 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் தேனி மாவட்ட விண்ணப்பதாரா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான முழு மாதிரி தோ்வுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 21), 28-ஆம் தேதி, ஜூலை 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் டிஎன்பிஎஸ்சி தரத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.
இந்தத் தோ்வை எழுத வரும் விண்ணப்பதாரா்கள் மாா்பளவு புகைப்படம், விண்ணப்ப நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இந்த மாதிரித் தோ்வில் பங்குபெற விருப்பும் விண்ணப்பதாரா்கள் தங்களின் பெயரை 6379268661 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.