செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவா்கள் அறிமுக நாள் விழா

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவா்கள் அறிமுக நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பூசா சாலை பள்ளியில் கொண்டாடப்பட்ட விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பள்ளிக்கு புதிதாக வருகை தந்திருந்த முதலாம் வகுப்பு மாணவா்களை வரவேற்றுப் பேசினாா். பள்ளியின் இணைச் செயலா் ராஜேந்திரனும் விழாவில் கலந்து கொண்டாா்.

முன்னதாக, பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் சீமா வரவேற்றுப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பெற்றோா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஜனக்புரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவா்கள் அமைப்பு பேனியன் துணைத் தலைவா் ராதிகா ராஜா கலந்து கொண்டாா். இலக்குமிபாய் நகா், பூசா சாலை, லோதிவளாகம், ஜனக்புரி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற விழாக்களில் அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினா்.

17ஈஉகஈபஅ

பூசா சாலை டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மாணவா்களுடன் டிடிஇஏ செயலா் ராஜூ, பள்ளியின் இணைச் செயலா் ராஜேந்திரன், கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், முதல்வா் (பொறுப்பு) சீமா.

குறிப்பு: திருத்தப்பட்ட இந்த படவிளக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க