செய்திகள் :

``டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

post image

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாசனத்திற்காக அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகம் முழுதும் மழை பெய்தாலும் உசிலம்பட்டி பகுதி வறட்சியாக உள்ளது, வைகை அணையிலிருந்து 58 ஆம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

டிடிவி தினகரன்-எடப்பாடி பழனிசாமி

டிடிவி.தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார், மீடியா வெளிச்சத்துக்காக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்கிறார், மீடியா வெளிச்சம் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் டிடிவி-யை மறந்து விடுவார்கள்.

டெல்டா மாவட்ட மண்ணின் மைந்தனான டிடிவி தினகரன், நெல் கொள்முதல் செய்யாததால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளின் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும். போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல டிடிவி தினகரனின் பேச்சுக்கள் உள்ளது, மக்கள் பணிகளை முதலில் செய்யட்டும் பின்னர் மக்கள் தலைவர் குறித்து பேசட்டும், டிடிவி தினகரனுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் போவோர் வருவோரை ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடைபெறாது அவருடைய கதை முடிந்து போன கதை, Expiry Date-க்கு முன்னாள் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும், பின்னால் சாப்பிட்டால் விஷமாகும், மருந்து வேண்டுமா? விஷம் வேண்டுமா? என மக்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.

டிடிவி.தினகரன் Expiry Date அரசியல்வாதியாக உள்ளார், அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம், டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து வீணாகியுள்ளது, டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது, டெல்டா விவசாயிகள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.குற்றச்சாட்டுஅதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ... மேலும் பார்க்க

3 வருஷம் சவுதியில் நடந்த கொடுமை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Kafala | Saudi

வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் வகையில், சவுதியில் 50 வருடங்களாக நடைமுறையில் இருந்த கஃபாலா என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களிக் செய்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ... மேலும் பார்க்க

`முதல்வருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுனு அமைதியா.!' - துரைமுருகன் பேச்சால் செல்வப்பெருந்தகை காட்டம்

வடகிழக்கு பருவமழையால் கடந்த 10 நாள்களாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகள், ஏரி போன்ற நீர்நிலைகள் நிரம்பிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே தி... மேலும் பார்க்க