செய்திகள் :

'டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார்.

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் அதிபர் உண்மையிலேயே ஒரு சமாதான பேச்சுவார்த்தையைதான் விரும்பினாரா எனத் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர்,

பேச்சுவார்த்தை வெற்றியடையாமல் போனதற்கு ஸெலென்ஸ்கி அதிபர் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இது விரோதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் டிரம்ப்புடனான சந்திப்பு வாக்குவாதமாக மாறியதற்கு ஜெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்தார். எனினும் டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேச்சுவார்த்தையில் தோல்வி என்பது இரு தரப்புக்குமே நல்லதல்ல என்றும் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

மேலும், "நாங்கள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஏதாவது மோசமான செயலைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.

இதையும் படிக்க | காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப் - ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை

டிரம்ப் - ஸெலென்ஸ்கி பேச்சுவார்த்தை!

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா்.

இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.

இந்தச் சூழலில், இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா். இதனால், டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசார வாக்குவாதமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப், பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தாா்.

அதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளா்கள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் உடனிருந்தாா்.

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு காரசார வாக்குவாதத்தில் முடிந்தது.உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவர... மேலும் பார்க்க

மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுக... மேலும் பார்க்க

டிரம்ப் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிரடி முடிவு

அமெரிக்காவிலிருந்து நியூ ஸிலாந்துக்கு குடிபெயரப்போவதாகவும், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும், டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்து... மேலும் பார்க்க

சா்வதேச உதவிக்கு நிதிக் குறைப்பு: பிரிட்டன் அமைச்சா் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாம... மேலும் பார்க்க

காரசார விவாதத்தில் முடிந்த டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு: பாதியில் முடிந்த ஆலோசனை

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இட... மேலும் பார்க்க

மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக துருக்கியில் இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க