செய்திகள் :

டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?

post image

அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியா நாட்டின், புதிய அமெரிக்க தூதராக வலதுசாரி விமர்சகரும், இஸ்ரேல் ஆதரவாளருமான நிக் ஆடம்ஸ் என்பவரை அதிபர் டிரம்ப், கடந்த ஒரு வாரம் முன்பு நியமணம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் இன்னும் தூதராக உறுதி செய்யப்படாதச் சூழலில், அவருக்கு எதிராக, மலேசியாவின் இளைஞர் அமைப்புகள் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே கையில் நிக் ஆடம்ஸ்-க்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மலேசியாவில் இனவெறியாளர்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர்களுக்கு இடமில்லை எனக் கூறி, ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த, அமெரிக்க குடியுரிமைப் பெற்ற நிக் ஆடம்ஸ்-ன் நியமணத்தைத் திரும்பப் பெறுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்துடன், தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிக் ஆடம்ஸ், தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றார். மேலும், ஆல்ஃபா மேல், கிரேக்க கடவுளைப் போல் உருவாக்கப்பட்டவர், அதிபர் டிரம்ப்பின் விருப்பமான எழுத்தாளர் எனத் தன்னைத் தானே குறிப்பிட்டு பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, இஸ்ரேலுடன், மலேசியா இதுவரையில் எந்தவொரு ராஜதந்திர உறவுகளையும் கொண்டிருக்கவில்லை. மேலும், தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக மலேசியா அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றது.

மலேசியா பொருள்களின் மீது அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவிகித வரிகளைப் பற்றி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் நிக் ஆடம்ஸ்-ன் நியமணம், பேச்சுவார்த்தைகளை மேலும் இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு! வெள்ளை மாளிகை

Malaysians are protesting at the gates of the US embassy against the new US ambassador to Malaysia, appointed by President Donald Trump.

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப்... மேலும் பார்க்க

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப... மேலும் பார்க்க

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்று... மேலும் பார்க்க

கலப்படத்தால் நடுவழியில் நின்ற பாதுகாப்பு வாகனம்! டாக்ஸியில் சென்ற ஈரான் அதிபர்!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் பழுதானதால், அவர் டாக்ஸி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்களில் இன்று (ஜூலை 18) செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் ம... மேலும் பார்க்க

டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு! வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் (வயது 79), இரண்டாவது முறையாக கடந... மேலும் பார்க்க

செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?

இலங்கை நாட்டின், கொழும்புவில் உள்ள செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார்? பள்ளிச் சிறுமிகளா? ... மேலும் பார்க்க