செய்திகள் :

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

post image

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களில் அதிக லாப வரம்புகளாலும் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை விற்றதன் மூலம் ரூ.8,900 கோடி ஒரு முறை லாபம் ஈட்டியது.

எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு சேவை என பல்வேறு துறை வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் முகேஷ் அம்பானி தலைமயிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.26,994 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.15,138 கோடியிலிருந்து இந்த சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும், ஏசியன் பெயிண்ட்ஸில் பங்கு விற்பனையிலிருந்து லாபத்தைத் தவிர்த்து, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவிகிதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் லாபம் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை விட கணிசமாக அதிகமாகும். வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடிக்கு முந்தைய அதன் அதிகபட்ச ஒருங்கிணைந்த காலாண்டு வருவாயையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் (EBITDA) 35.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.58,024 கோடியாக உள்ளது.

உலகளாவிய குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கத்திற்கு முந்தைய வருவாய் ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்தை விட வலுவாக மேம்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

Reliance Industries Ltd Q1 net profit surges 78% to Rs 26,994 crore

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

வங்கிப் பங்குகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! 600 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

பங்குச்சந்தைகள் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,193.62 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.45 மணி நிலவரப்படி செ... மேலும் பார்க்க

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இர... மேலும் பார்க்க