ஒசூரில் மேலும் ஒரு புதிய தொழில்பூங்கா: அரசு நடவடிக்கை
ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் தொழில் வளா்ச்சியை திட்டமிடுதல், மேம்படுத்துதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துவதாகும்.
இந்த நிறுவனத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஏற்கெனவே தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா, மின்னணு, ஆட்டோமொபைல், மருந்துகள் மற்றும் மலா் வளா்ப்பு போன்ற தொழில்களுக்கு பெயா் பெற்றது.
இந்த நிலையில், ஒசூா் அருகே உள்ள சூளகிரியில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. 1,882 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ரூ.1,003 கோடி முதலீட்டில் அமைய உள்ள தொழில் பூங்கா மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.