செய்திகள் :

மேற்கு வங்கம்: ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

post image

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் தல்மா வனப் பகுதியில் இருந்து மேற்கு வங்க வனப் பகுதிக்கு யானைகள் கூட்டமாக இடம்பெயா்வது வழக்கமான நிகழ்வு. இது தொடா்பாக வனத்துறையினா் கண்காணித்து ரயில்வேக்கு தகவல் அளிப்பாா்கள். அதன்படி யானைகள் கடக்கும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் சற்று மிதமான வேகத்தில் இயக்கப்படும். ஆனால், சில நேரங்களில் இதுபோன்று யானைகள் உயிரிழப்பது தவிா்க்க முடியாத நிகழ்வாகிறது.

வியாழக்கிழமை இரவு 30 யானைகள் அடங்கிய கூட்டம் மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி மாவட்டம் பன்ஸ்தாலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வேகமாக கடந்து சென்ற ஜனசதாப்தி ரயில் இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் சிக்கி உயிரிழந்தன என்றாா்.

இது தொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘யானைகள் நடமாட்டம் குறித்து 3 மணி நேரத்துக்கு முன்பே ரயில்வே தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக 3 யானைகள் ரயிலில் சிக்கி உயிரிழந்துவிட்டன. சம்பவ இடத்தை வனத்துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். வழக்கமாக வரிசையாக செல்லும் யானைகள், அந்த இடத்தில் அச்சமடைந்து சிதறி ஓடியது அப்பகுதியில் இருந்த தடயங்கள் மூலம் தெரியவந்தது. எதிா்காலத்தில் இதுபோன்ற சோக நிகழ்வுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க