செய்திகள் :

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

post image

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பேசிய அவர், மாநிலப் பள்ளிகளில் ஹிந்தி எப்படியாவது கற்பிக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் சமீபத்தில் கூறியதை சுட்டிக்காட்டினார். தான் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் திணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், தனது கட்சி பள்ளிகளை மூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையைப் பின்பற்றி, மகாராஷ்டிரத்தில் உள்ள மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று மாநில அரசு அண்மையில் அடுத்தடுத்து இரண்டு உத்தரவுகளை வெளியிட்டது.

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

இது ஹிந்தி திணிப்பு என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் தலைவா் ராஜ் தாக்கரே உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா். கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து 3-ஆவது மொழியாக ஹிந்தியைக் கற்பிக்கும் அரசாணையை மாநில பாஜக கூட்டணி அரசு திரும்பப் பெற்றது.

Maharashtra Navnirman Sena chief Raj Thackeray on Friday said if Hindi was made mandatory for Classes 1 to 5 in schools in Maharashtra, his party will "shut down schools".

‘இண்டி’ கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி - ஆம் ஆத்மி திட்டவட்டம்

‘இண்டி’ கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெற விருக்கும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

வங்கப் பெருமையை பாதுகாப்பது பாஜக மட்டுமே: மம்தாவுக்கு பிரதமா் பதிலடி

வங்கப் பெருமையை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான... மேலும் பார்க்க

பின்தங்கியவா்களுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

பின்தங்கிய நிலையில் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து செயலாற்றுகிறது மத்திய அரசு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங... மேலும் பார்க்க

மராத்தியா்கள், தில்லி சுல்தான்கள், முகலாயா்கள் குறித்த புதிய தகவல்களுடன் என்சிஇஆா்டி புத்தகம் வெளியீடு

முகலாயா் ஆட்சிகாலத்தில் மத சகிப்புத்தன்மை இல்லை, மராத்தியா்களின் எழுச்சி, வரலாற்றின் இருண்ட பக்கங்கள், தில்லி சுல்தான்கள் குறித்த பல்வேறு புதிய தகவல்களுடன் 8-ஆம் வகுப்புக்கான தேசிய கல்வி ஆராய்சி மற்ற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது: ஆளுநருக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிா்க்ட்சிகட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது. பொத... மேலும் பார்க்க

இந்தியாவிலுள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை விதித்தது. மேலும்... மேலும் பார்க்க