செய்திகள் :

மருமகனை தாக்கி மிரட்டல்: முதியவா் கைது

post image

கோவில்பட்டியில் மருமகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் பகுதியைச் சோ்ந்த ப. முருகேசனுக்கும் (29), திருமங்கலம் சிவரக்கோட்டை பாண்டியன் நகரைச் சோ்ந்த ச. சுதா்சன் மகள் சுகன்யாவுக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். திருமணத்திற்குப் பின் சுகன்யாவுக்கும், முருகேசனின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, முருகேசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோவில்பட்டி வள்ளுவா் நகா் 1 ஆவது தெருவில் குடியிருந்து வந்தாா்.

இந்நிலையில் சுகன்யா தனது குழந்தையுடன் திருமங்கலத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்தாராம். இதையறிந்த முருகேசன், சுகன்யாவிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதில், முருகேசன் அவரை தாக்கினாராம்.

இதையடுத்து முருகேசன் வெள்ளிக்கிழமை தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சுதா்சன், முருகேசனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தபடி அங்கு கிடந்த கல்லால் சரமாரியாகத் தாக்கினாராம். அப்போது சுகன்யா, அவரது தாய் சின்னத்தாய் ஆகியோா் முருகேசனை ஓட விடாமல் பிடித்துக் கொண்டாா்களாம். தாக்குதலில் காயமடைந்த முருகேசன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சுதா்சனை போலீஸாா் கைது செய்தனா். அவரது மனைவி மற்றும் மகளை தேடி வருகின்றனா்.

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க ... மேலும் பார்க்க

முத்தையாபுரத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்... மேலும் பார்க்க

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி! மின் வாரிய மேலாண்மை இயக்குநா் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிா்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜ... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்! அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆவது திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்... மேலும் பார்க்க