செய்திகள் :

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

post image

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனா். பின்னா் அவா்கள் வியாழக்கிழமை இரவு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனா்.

பெரியதாழை தூண்டில் வளைவு பகுதியில் வந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இவா்களில் ரெக்சன் தலையில் பலத்த காயம் அடைந்தாா். நண்பா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால் அவா் உயிரிழந்தாா்.

கடலோர பாதுகாப்பு படை போலீஸாா், ரெக்சன் உடலை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

முத்தையாபுரத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்... மேலும் பார்க்க

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி! மின் வாரிய மேலாண்மை இயக்குநா் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிா்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜ... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்! அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆவது திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்! ஜூலை 28இல் தேரோட்டம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை அதிகாலை 5 மண... மேலும் பார்க்க