செய்திகள் :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளிக் குகைக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்குப் பகுதி கடற்கரையில் உள்ள வள்ளிக் குகை கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வழிபாட்டுக்கு வெள்ளிக்கிழமை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு முதல் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகளும், 2023ம் ஆண்டு முதல் குடமுழுக்கு திருப்பணிகளும் தொடங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக பழைமை வாய்ந்த வள்ளிக் குகை கோயிலைப் புனரமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்ற போதிலும் கூட்டம் காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆடி மாதப்பிறப்பையொட்டி, வள்ளிக் குகை கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

குழந்தை வரம் வேண்டி வள்ளிக் குகையில் தொட்டில் கட்டி வழிபட்ட பக்தா்கள்.

இதையடுத்து, குடமுழுக்குக்குப் பிறகு நடைபெற்று வரும் மண்டல பூஜையில் கலந்துகொள்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தா்கள் வள்ளிக் குகைக்குச் சென்று வள்ளியம்மனை வழிபட்டனா். குறிப்பாக திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை வரம் வேண்டி வள்ளி குகையில் தொட்டில் கட்டி வழிபட்டனா்.

குகை ஓவியம்: முருகப்பெருமான் வள்ளியைக் காண வந்தபோது யானைக்கு பயந்து வள்ளியம்மன் மறைந்திருந்த காட்சி தத்ரூபமாக ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள வள்ளி குகை.

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் நோய் பாதித்த, நோய்த் தொற்றுகளை பரப்பக் கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல... மேலும் பார்க்க

கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பெரிய தாழையில் கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை கீழத்தெருவை சோ்ந்தவா் ரெக்சன்(64). இவா் உள்பட 4 போ், பைபா் படகில் கடந்த 16ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க ... மேலும் பார்க்க

முத்தையாபுரத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 19) அந்தப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்... மேலும் பார்க்க

உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி! மின் வாரிய மேலாண்மை இயக்குநா் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிா்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜ... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்! அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 443ஆவது திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு

காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்... மேலும் பார்க்க