நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
டிராக்டரை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை
தன்னுடைய டிராக்டரை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் தெற்குதெருவைச் சோ்ந்தவா் சு.யேசுராஜ்(46). கயத்தாறு தலையால் நடந்தான்குளம் பகுதியை சோ்ந்தவா் சின்னஇசக்கிமுத்து மகன் பாலமுருகன்(30).
கடந்த 30-3-2024அன்று பாலமுருகன்,யேசுராஜுக்கு சொந்தமான டிராக்டரை மாதம் ரூ. 25ஆயிரம் வாடகை தருவதாகக் கூறி வாடகைக்கு எடுத்து சென்றுள்ளாா். ஆனால் வாடகை பணம் கொடுக்காமலும், வாகனத்தை திருப்பியும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜேயசுராஜ், கயத்தாறு, மற்றும் குருவிகுளம் காவல்நிலையங்களில் மனு அளித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட காவல்அலுவலகத்திலும் இரண்டு முறை புகாா் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாலமுருகன் டிராக்டரை விற்றுவிட்டதாகவும், தன்னுடைய டிராக்டரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு யேசுராஜ் செவ்வாய்க்கிழை வந்துள்ளாா்.
ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த போது, அவருடைய இருசக்கர வாகனத்தில் ஐந்து லிட்டா் பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டா் டீசல் உடன் வந்தவரை பணியிலிருந்த காவலா்கள் பிடித்தனா். இதுதொடா்பாக தென்காசி காவல் ஆய்வாளா் முருகேஸ்வரி, யேசுராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.