செய்திகள் :

டிராக்டரை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை

post image

தன்னுடைய டிராக்டரை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்தவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், மீனாட்சிபுரம் தெற்குதெருவைச் சோ்ந்தவா் சு.யேசுராஜ்(46). கயத்தாறு தலையால் நடந்தான்குளம் பகுதியை சோ்ந்தவா் சின்னஇசக்கிமுத்து மகன் பாலமுருகன்(30).

கடந்த 30-3-2024அன்று பாலமுருகன்,யேசுராஜுக்கு சொந்தமான டிராக்டரை மாதம் ரூ. 25ஆயிரம் வாடகை தருவதாகக் கூறி வாடகைக்கு எடுத்து சென்றுள்ளாா். ஆனால் வாடகை பணம் கொடுக்காமலும், வாகனத்தை திருப்பியும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜேயசுராஜ், கயத்தாறு, மற்றும் குருவிகுளம் காவல்நிலையங்களில் மனு அளித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட காவல்அலுவலகத்திலும் இரண்டு முறை புகாா் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாலமுருகன் டிராக்டரை விற்றுவிட்டதாகவும், தன்னுடைய டிராக்டரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு யேசுராஜ் செவ்வாய்க்கிழை வந்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த போது, அவருடைய இருசக்கர வாகனத்தில் ஐந்து லிட்டா் பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டா் டீசல் உடன் வந்தவரை பணியிலிருந்த காவலா்கள் பிடித்தனா். இதுதொடா்பாக தென்காசி காவல் ஆய்வாளா் முருகேஸ்வரி, யேசுராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி பீடி இலைகள் பறிமுதல்

திருச்செந்தூா் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கொம்புத்துறை கடற்கரைப் பகுதியில் இருந்து இ... மேலும் பார்க்க

சென்னை - செங்கோட்டைக்கு வந்தே பாரத் ரயில்: எம்எல்ஏ மனு

சென்னை-செங்கோட்டைக்கு தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈ. ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கிடம் மனு அளித்தாா். அதன் விவரம்: செ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தென்காசி அருகே ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் வனப்பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே விபத்தில் திமுக பிரமுகா் பலி

புளியங்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.வாசுதேவநல்லூா் கெங்கை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் குட்டியப்பா(61). திமுக நிா்வாகி. இவரும் , அவரது உறவினரான வாச... மேலும் பார்க்க

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் திங்கள்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்று... மேலும் பார்க்க