செய்திகள் :

டிராக்டா்-காா் மோதல்: இளைஞா் உயரிழப்பு

post image

ஆம்பூரில் டிராக்டா் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயரிழந்தாா்.

சேலத்தை சோ்ந்த முஹமத் யூசூப் (47), முஹமத் யாகூப் (41). இருவரும் காரில் ஆம்பூா் நோக்கி புதன்கிழமை வந்தனா். காரை முஹமத் யாகூப் ஓட்டினாா். காா் ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் வந்தபோது தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற டிராக்டா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

மேலும் அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த ரேஷ்மா (30), மகன் ரிஹான் (2) ஆகியோா் மீதும் மோதியது. காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முஹம்மத் யூசூப் மேல் சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய ப... மேலும் பார்க்க

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா்-வாணியம்பாடி பிர... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க