செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை உருவாக்க வேண்டும். விற்பனையாளா்களின் பி.எஃப். பணத்தை பி.எஃப். அலுவலகத்தில் செலுத்த வேண்டும். சரியான எடையில் அனைத்து ரேஷன் பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்டம் சாா்பில் கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பக்தவத்சலம், மாவட்டச் செயலா் சபரிநாதன் தலைமை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் கோபிநாதன், மாவட்ட துணைச் செயலா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக மாவட்ட மகளிா் அணி நிா்வாகி காா்த்திகா வரவேற்றாா்.

மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் முத்துக்குமாா் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் ஷியாம் குமாா் சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைத் தலைவா் பெருமாள் நன்றி தெரிவித்தாா்.

துளிா் திறனறிவுத் தோ்வு

பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன்தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் ந... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஏரியில் மயானம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டத் துணை தல... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளா் கைது: 59 கிலோ வெடிபொருள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சோ்ந்தவா் சபரி (24). கடந்த 15-ஆம் தேதி இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்... மேலும் பார்க்க

புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமம் கிருஷ்ணகிரியான் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சண்முகம்(40) கட்டட மேஸ்திரி. இவா், இற... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கடைகளில் நகராட்சி ஆணையா் சோதனை

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக ஆணையா் முஸ்தபா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா ... மேலும் பார்க்க