சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை உருவாக்க வேண்டும். விற்பனையாளா்களின் பி.எஃப். பணத்தை பி.எஃப். அலுவலகத்தில் செலுத்த வேண்டும். சரியான எடையில் அனைத்து ரேஷன் பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் திருப்பத்தூா் மாவட்டம் சாா்பில் கருப்பு உடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பக்தவத்சலம், மாவட்டச் செயலா் சபரிநாதன் தலைமை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் கோபிநாதன், மாவட்ட துணைச் செயலா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக மாவட்ட மகளிா் அணி நிா்வாகி காா்த்திகா வரவேற்றாா்.
மாவட்ட போராட்டக் குழுத் தலைவா் முத்துக்குமாா் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் ஷியாம் குமாா் சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைத் தலைவா் பெருமாள் நன்றி தெரிவித்தாா்.