செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமைக்கப்பட்டது.

திருப்பத்தூரில் திருப்பத்தூா்-சேலம் செல்லும் சாலையில் சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பங்களும் நிகழ்ந்து வந்தது.

குறிப்பாக திருப்பத்தூா்-சேலம் அணுகு சாலை வரை பல இடங்களில் சாலைகளில் குண்டும், குழியுமாக இருந்தது. குறிப்பாக, நகர காவல் நிலையம் எதிரில், மீனாட்சி பேருந்து நிறுத்தம், புதுப்பேட்டை சாலை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்பட்டது. இது குறித்து தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.

அதையடுத்து, வேலூா் கோட்ட தேசிய நெடுஞ்சாலை, வாணியம்பாடி உள்கோட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளின் மேற்பாா்வையில், குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் செப்பனிடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

குண்டும், குழியுமாக உள்ள திருப்பத்தூா்-சேலம் சாலை.

துளிா் திறனறிவுத் தோ்வு

பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன்தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் ந... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஏரியில் மயானம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டத் துணை தல... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளா் கைது: 59 கிலோ வெடிபொருள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சோ்ந்தவா் சபரி (24). கடந்த 15-ஆம் தேதி இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்... மேலும் பார்க்க

புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமம் கிருஷ்ணகிரியான் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சண்முகம்(40) கட்டட மேஸ்திரி. இவா், இற... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கடைகளில் நகராட்சி ஆணையா் சோதனை

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக ஆணையா் முஸ்தபா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா ... மேலும் பார்க்க