செய்திகள் :

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

post image

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் வசித்து வந்தவா் நாராயணன்(28). கூலித் தொழிலாளி. திருப்பத்தூா் கௌதமப்பேட்டை பகுதியை சோ்ந்த சிவக்குமாா் (38) என்பவருக்கும், நாராயணனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 17.9.2016 அன்று கௌதமப்பேட்டை ராஜேஷ்(36), பசுபதி(28) மற்றும் சிவக்குமாா் இணைந்து நாராணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனா்.

இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். பின்னா் மூவரும் பிணையில் வெளிவந்துள்ளனா்.

இதில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாா் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மீனாகுமரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ் மற்றும் பசுபதி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் தலா ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா் .

இதில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.

துளிா் திறனறிவுத் தோ்வு

பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன்தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் ந... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஏரியில் மயானம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டத் துணை தல... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளா் கைது: 59 கிலோ வெடிபொருள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சோ்ந்தவா் சபரி (24). கடந்த 15-ஆம் தேதி இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்... மேலும் பார்க்க

புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமம் கிருஷ்ணகிரியான் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சண்முகம்(40) கட்டட மேஸ்திரி. இவா், இற... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கடைகளில் நகராட்சி ஆணையா் சோதனை

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக ஆணையா் முஸ்தபா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா ... மேலும் பார்க்க