செய்திகள் :

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.

வரும் 2025, 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கலையரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் வைப்புத் தொகையாக தலா ரூ.10 லட்சம் செலுத்தி 18 போ் கலந்து கொண்டனா். வாரச்சந்தை ஏலத்தை சீனிவாசன் என்பவா் ரூ.20 லட்சத்து 71 ஆயிரத்துக்கும், தினசரி கடைகளுக்கான ஏலத்தை குமாா் என்பவா் ரூ.8 லட்சத்து71ஆயிரத்துக்கும், நாட்டறம்பள்ளி பெரிய ஏரி மீன் மகசூல் ஏலத்தை சிவக்குமாா் ரூ.83ஆயிரத்துக்கும் எடுத்தனா்.

கடந்த ஆண்டு ஏலத்தை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

துளிா் திறனறிவுத் தோ்வு

பள்ளி மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. குணசேகரன்தலைமையில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் ந... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

ஆம்பூா் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் ஏரியில் மயானம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்டத் துணை தல... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளா் கைது: 59 கிலோ வெடிபொருள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சோ்ந்தவா் சபரி (24). கடந்த 15-ஆம் தேதி இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்... மேலும் பார்க்க

புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே புல்லூா் தடுப்பணையில் மூழ்கியவா் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமம் கிருஷ்ணகிரியான் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சண்முகம்(40) கட்டட மேஸ்திரி. இவா், இற... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கடைகளில் நகராட்சி ஆணையா் சோதனை

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக ஆணையா் முஸ்தபா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா ... மேலும் பார்க்க