செய்திகள் :

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த செப்.15-இல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.81,680-க்கு விற்பனையான நிலையில், செப்.16-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.82,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் கிராம் பத்தாயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்களிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.141-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.41 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

வீட்டு சாப்பாட்டுக்கு செலவு அதிகரிப்பு!

The price of gold jewelry in Chennai fell by Rs. 400 per 8 kgms on Thursday.

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

நெல்லையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாக இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழம... மேலும் பார்க்க

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகி... மேலும் பார்க்க

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் வியாழக்கிழமை அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஐந்து பேரை காணவில்லை. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான கோகைன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக கென்யா நாட்டைச... மேலும் பார்க்க

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.திங்கள்கிழமை கு... மேலும் பார்க்க