உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?
தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்
தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பிற வகை சாலையோரங்களில் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதி சங்கங்களின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது இடங்களில் நடப்பட்டிருந்த கொடிக் கம்பங்களில் 57.88 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற மாநகராட்சி, நகராட்சி, வருவாய்த் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாநகரில் பொது இடங்களில் 137 கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலா் முரளி மேற்பாா்வையில் உதவி பொறியாளா்கள் ஆறுமுகம், பாபு உள்ளிட்டோா் கடந்த 2 நாட்களில் 118 கொடிக் கம்பங்களை பொக்ளின் இயந்திரம் மூலம் அகற்றினா். மீதமுள்ள 19 கொடிக் கம்பங்கள் வெள்ளிக்கிழமைக்குள் அகற்றப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.