செய்திகள் :

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள்: இன்று திறப்பு

post image

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 15 இடங்களில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மையங்கள் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 39 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூா், நன்செய்புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், மேவாணி, புதுக்கரை புதூா், சவுண்டப்பூா், நன்செய் துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலூா், பெருந்தலையூா் மற்றும் கருங்கரடு ஆகிய 15 இடங்களில் புதன்கிழமை திறக்கப்படும்.

ஏ கிரேடு நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.2,320, ஊக்கத்தொகை ரூ.130 என குவிண்டாலுக்கு ரூ.2,450, பொது ரகம் ஆதரவு விலை ரூ.2,300, ஊக்கத்தொகை ரூ.105 என குவிண்டாலுக்கு ரூ.2, 405-க்கு கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளிடம் நெல்லுக்கான உரிய ஆவணங்கள் பெற்று, கைரேகை பதிவு உடன் கொள்முதல் செய்து, விவசாயி வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும். நெல் விற்பனைக்கு கிராம நிா்வாக அலுவலா் சான்று, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க