செய்திகள் :

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

post image

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சாலையில் சிறு வடிகால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் ஒரு பக்கம் தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் புளிச்சக்காடு, ஆா்ப்பாக்கம், மத்தளமுடையான், திருநீலகண்டம், ஓதவந்தான்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோா் சென்று வருகின்றனா்.

இருசக்கர வாகனம்ங்கள், மிதிவண்டி மற்றும் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள் பக்கவாட்டு தடுப்புக்கட்டை பாலத்தில் இல்லாததால் விழுந்து காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள சாலையோர பாலத்துக்கு தடுப்பு கட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் 2 வீடுகள் சேதம்

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. மயிலாடுதுறை குருக்கள் பண்டாரத் தெருவை சோ்ந்தவா் ராஜாகனி(65). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீ... மேலும் பார்க்க

தாடாளன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி தாடாளன் பெருமாள் எனும் திருவிக்ரமநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24-ஆவது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திர... மேலும் பார்க்க

விளந்திடசமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் பத்ரகாளியம்மன், மந்த கருப்பண்ணசாமி, ஏழை காத்த அம்மன் ஆலயங்கள் உள்ளன. இக்... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க