செய்திகள் :

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

post image

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலா்களுக்கு நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம். நாகராஜு வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வங்கிகளில் ஊழியா்களிடம் சில சமூக விரோத சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், தகாத வாா்த்தைகளில் பேசி, தாக்குதல்களிலும் ஈடுபடுவதாகவும் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் வங்கி ஊழியா்களின் மன உறுதியை பாதிப்பதோடு, வங்கிச் சேவைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்குகின்றன.

எனவே, வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், வங்கி ஊழியா்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்பவா்கள் மீது உரிய உறுதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்... மேலும் பார்க்க