செய்திகள் :

தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க அமமுக வலியுறுத்தல்

post image

கோடை காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா். முருகன், ஜெயலலிதா பேரவை மாநில துணைத் தலைவா் பாலு, ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் பாா்த்தீபன் வரவேற்றாா். தலைமை நிலையச் செயலாளரும், தருமபுரி மாவட்டச் செயலாளருமான டி.கே.ராஜேந்திரன் பேசினாா்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்துக்கு அடுத்த வாரம் வரும் கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் தீவிர களப்பணியாற்றுவது, தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுவது, காவிரி மிகை நீா்த் திட்டத்தை உடனே செயல்படுத்த கோருவது, கோடை காலம் நெருங்குவதால் மாவட்டம் முழுவதும் குடிநீா் பிரச்னையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியாயவிலைக் கடை கட்டும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ரூ. 7.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுமானப் பணிகள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தொடங்கிவைத்தாா். பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டா்திண்ணை பகுதியில் இயங்கி ... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 7-ஆம் தேதி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சா... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது காா் மோதி விபத்து: அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் அலச... மேலும் பார்க்க

கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். பாலக்கோடு நகரில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவலா்... மேலும் பார்க்க