இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
தண்டராம்பட்டு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.98,900 பறிமுதல்
தண்டராம்பட்டு சாா் - பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.98 ஆயிரத்து 900 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தண்டராம்பட்டு சாா் -பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளா் அருள்பிரசாத், உதவி ஆய்வாளா் கோபி உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் திடீரென உள்ளே நுழைந்தனா்.
பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தவா்கள், பத்திர எழுத்தா்கள், பத்திரப்பதிவு அலுவலக ஊழியா்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், கணக்கில் வராத ரூ.98 ஆயிரத்து 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சாா் - பதிவாளா் கதிரேசன் மற்றும் அலுவலா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.