செய்திகள் :

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட விஜயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், சிறப்பு பாா்வையாளராக பங்கேற்று பேசியதாவது, 2025 -ஆம் ஆண்டுக்கான உலக தண்ணீா் தினத்தை ஐநா சபையானது ‘பனிப்பாறை பாதுகாப்பு’ என்கிற சிறப்பு கருப்பொருளை அறிவித்தது.

இதன் அடிப்படையாகக் கொண்டு இன்றைய கூட்டம் நடத்தப்படுகிறது. 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீா் மற்றும் சுகாதாரம் சென்று சேர வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அந்த இலக்குகளை அடைய இணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் காரணமாக உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நீா் சாா்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிா்பானங்கள் பருகுவதைத் தவிா்த்து, அதிகளவில் மோா், இளநீா், உப்பு மற்றும் மோா் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சாந்தி, வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரியா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க