செய்திகள் :

தனிமையில் நெருக்கம்... வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டிய டாக்சி டிரைவரை கொன்ற காதல் ஜோடி

post image

பஞ்சாப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கம்பெனிக்கு செல்ல சுரேந்திர பாண்டே என்பவரின் ஓலா டாக்சியை பயன்படுத்தி வந்தார். எனினும் அவர் நிரந்தரமாக தங்குவதற்கு உடனே வீடு கிடைக்கவில்லை. இது குறித்து சுரேந்திர பாண்டேயிடம் அப்பெண் பேசினார். இதையடுத்து சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தங்க இடம் கொடுப்பதாக தெரிவித்தார்.

சுரேந்திர பாண்டே தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அப்பெண்ணுக்கு தனது வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனிடையே, அப்பெண் வீட்டில் இருந்தபோது அவரின் காதலன் விஷால் என்பவர் வந்தார். அங்கு இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தனிமையில் இருந்ததை பார்த்த, பாண்டே தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அதன் பிறகு வீடியோவை காட்டி மிரட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி அப்பெண்ணை பாண்டே மிரட்டி உள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றிய நிலையில், அப்பெண் காதலன் என இருவரும் சேர்ந்து பாண்டேயை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இருவரும் விஷாலின் சொந்த ஊரான சங்கம்னாருக்கு தப்பிச்சென்றனர்.

அங்கு அவர்கள் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறினர். இதையடுத்து உறவினர்கள் இருவரிடமும் சொல்லி போலீஸில் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். அதன் படி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் உண்மையை சொல்லி சரணடைந்தனர். இதையடுத்து நவிமும்பை போலீஸாருக்கு இது குறித்து சங்கம்னார் போலீஸார் தகவல் கொடுத்தனர். நவிமும்பை போலீஸார் பாண்டேயின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க