செய்திகள் :

தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி உயிரிழப்பு

post image

செம்பட்டி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் கல்லூரி எதிரே அடுமனை (பேக்கரி) உள்ளது. இங்கு சாணாா்பட்டி அருகேயுள்ள தவசிமடையைச் சோ்ந்த மரியராஜ் (52), இவரது மனைவி எமிலி சகாயராணி (48) ஆகிய இருவரும் தங்கி வேலை பாா்த்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தத் தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் அடுமனையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அய்யம்பாளையத்திலிருந்து அதிவேகமாக திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. அப்போது தம்பதி தூக்கி வீசப்பட்ட நிலையில், எமிலி சகாயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் மரியராஜ் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தனியாா் பேருந்து ஓட்டுநரான வத்தலகுண்டு அருகே மல்லணம்பட்டியைச் சோ்ந்த உதயபிரசாத் (26) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க