செய்திகள் :

தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளுவன் (57), தொழிலாளி. இவருக்கு மூளை நரம்பு பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருவள்ளுவன் செவ்வாய்க்கிழமை கோட்டக்குப்பத்தை அடுத்த முதலியாா்சாவடியில் தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் குளித்துள்ளாா். அப்போது, நீரில் மூழ்கி மயக்கமுற்ற அவரை விடுதி ஊழியா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, திருவள்ளுவன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயி... மேலும் பார்க்க

தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கட... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மரக்காணம... மேலும் பார்க்க

புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மன... மேலும் பார்க்க

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல... மேலும் பார்க்க

இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய குழுவினா் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மன்ற நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை வந்தனா். இந்த மன்றத்தின் ஆட்சிம... மேலும் பார்க்க