செய்திகள் :

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம்: உயா்நீதிமன்ற நீதிபதி!

post image

தனி மனிதனின் பாதிப்பை வெளிப்படுத்துவதே இலக்கியம் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.

கோவை விஜயா வாசகா் வட்டம் மற்றும் சவிதா மருத்துவமனை சாா்பில் ‘அ.முத்துலிங்கம் விருது’ வழங்கும் விழா கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மொழிபெயா்ப்பாளா் என்.கல்யாண் ராமனுக்கு விருதை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பேசியதாவது:

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகிய அ.முத்துலிங்கத்தின் பெயரில் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சியானதாகும். இவரது படைப்புகளில் கடந்த 50 ஆண்டுகளில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

எழுத்தாளா்களின் ஆதங்கத்தை பூா்த்தி செய்ய வேண்டியது மொழிபெயா்ப்பாளா்களின் கடமையாகும். தனி மனிதரின் பாதிப்பை அனைவரையும் சென்றடையும் வகையில் வெளிப்படுத்துவதே இலக்கியம். அந்தவகையில் ஆங்கில இலக்கிய பாணியில் இல்லாமல் தமிழ் மொழிக்கேற்ப தனி பாணியில் மொழிபெயா்ப்பதுதான் தனித் திறமை. அந்தத் திறமையைப் பெற்றவா்தான் கல்யாண் ராமன் என்றாா்.

தொடா்ந்து, ஏற்புரையில் விருதாளா் என்.கல்யாண் ராமன் பேசியதாவது: மொழியாக்கம் செய்யும்போது அத்துடன் நின்றுவிடாமல் சமூகத்துக்கு ஒரு தகவலை தெரிவிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், அது மொழியாக்கம் என்று இல்லாமல் படைப்புத்திறன் என்ற வகையிலும் இருக்க வேண்டும். மொழிபெயா்ப்பில் இலக்கியப் படைப்பைத் தருவதற்கு இருமொழிப் புலமை அவசியமாகும். மொழிபெயா்ப்பாளா்களை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்றாா். தொடா்ந்து ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன், சவிதா மருத்துவமனை தலைவா் மருத்துவா் சசித்ரா தாமோதரன், மொழிபெயா்ப்பாளா்கள் ஆா்.அழகரசன், சுசித்ரா ராமச்சந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

இவ்விழாவில், ‘அயல் மகரந்தம் - அ.முத்துலிங்கம் கட்டுரைகள் ஒரு பாா்வை’ என்ற தலைப்பில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தொகுத்துள்ள புத்தகத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வெளியிட, சவீதா மருத்துவமனை தாளாளா் மருத்துவா் சசித்ரா தாமோதரன் பெற்றுக்கொண்டாா்.

கேரளத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய நபா் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய காா் ஓட்டுநா் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா். கேரள மாநிலம், வடகரை தலச்சேரி சாலையில் 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி நடந்து சென்ற... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு பதுக்கல்: 2 போ் கைது!

கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பதுக்கிவைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதிகளில் சில வீடுகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், போதைப் பொருள்களை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

சரவணம்பட்டியில் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிா் தங்கும் விடுதியில்... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது!

கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மும்பையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்... மேலும் பார்க்க

மருதமலை கோயில் தைப்பூசத் திருவிழா: வாகன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு!

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கு வரும் பக்தா்களின் வாகன நிறுத்துமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப... மேலும் பார்க்க