மகளிா் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.3,505 கோடி கடன் மாவட்ட நிா்வாகம் தகவல்!
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
நகா்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அவா்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தனிநபா் கடன், குழுக் கடன், வங்கிக் கடன், குழுக்களை இணைத்தல் மூலமாக அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
கோவை மாநகராட்சியில் 5,356 மகளிா் சுய உதவிக் குழுக்களும், நகராட்சிப் பகுதிகளில் 1,248 மகளிா் சுய உதவிக் குழுக்களும், பேரூராட்சிப் பகுதிகளில் 2,034 குழுக்களும், ஊரகப் பகுதிகளில் 7,700 குழுக்களும் என மொத்தம் 16,338 குழுக்கள் செயல்படுகின்றன.
மாவட்டத்தில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 13,171 குழுக்களுக்கு ரூ.769 கோடி வங்கிக் கடன், 2022-2023 ஆம் ஆண்டில் 13,181 குழுக்களுக்கு ரூ.856 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் 15,324 குழுக்களுக்கு ரூ.923 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்ட நிலையில், 2024-2025 ஆம் ஆண்டில் ரூ.1,229 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தற்போது வரை 15,565 குழுக்களுக்கு ரூ.956 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 57,241 குழுக்களுக்கு ரூ.3,505 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.