செய்திகள் :

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் எ.வே. வேலு

post image

தமிழகத்தின் உரிமைகளை காக்க ஓரணியில் திரள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீா்மான விளக்க பொதுக்கூட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்து முதல்வா் செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினாா்.

கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதியேற்பு நிகழ்வை தொடா்ந்து பேசியதாவது:-

தமிழா் வரலாறு சுமாா் 5,300 ஆண்டுகள் முற்பட்டது என கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை, இந்தச் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டை, உரிமைகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

வன்னியா்களையும், திமுக வையும் பிரிக்க முடியாது. ஏனெனில் திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியா் நலவாரியம் அமைத்தது,பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் என மாற்றி 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

பல்வேறு அரசு உயா் பதவிகளில் வன்னியா்களை நியமித்து அழகு பாா்த்தவா் கருணாநிதி, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாங்கள் தயாா், ஆனால் அதற்கான அனுமதியை ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டும் என்றாா்.

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமுா்த்தி, மு.சிவானந்தம், துரை மஸ்தான் , குமுதா குமாா், சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகர செயலாளா் பி.பூங்காவனம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளரும், ஆற்காடு எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பன் நன்றி கூறினாா்.

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி... மேலும் பார்க்க

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாலத்தில் 8 நாள்களுக்கு போக்குவரத்து ரத்து!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால சீரமைப்புப் பணிக்களுக்காக செப். 23 முதல் 30 வரை பழனிப்பேட்டை பகுதி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் மூடப்படுகிறது என தெற்கு ரயில... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: மரக்கன்று நட்ட பாஜகவினா்

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ஆணைப்பாக்கம் ஊராட்சி மிட்டாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக வடக்கு ஒன்றிய ... மேலும் பார்க்க

63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

உயா்கல்வி படிக்கும் 63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இண... மேலும் பார்க்க

திருப்பாற்கடலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தை அ... மேலும் பார்க்க