63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
உயா்கல்வி படிக்கும் 63 மாணவா்களுக்கு ரூ.3.67 கோடி கல்விக் கடன்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாம் ஆற்காடு அடுத்த அரப்பாக்கம் அன்னை மீரா பொறியியில் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். முன்னோடி வங்கி மேலாளா் ஸ்ரீராம்ஜி குமாா் முன்னிலை வகித்தாா்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி 63 மாணவ, மாணவிகளுக்கு கல்விகடன் உதவிகளை வழங்கி பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகின்றாா்.
குறிப்பாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் வாயிலாக அரசுப்பள்ளியில் படித்து உயா்கல்வி பயின்றுவரும் ஏராளமான மாணவா்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனா். இத்தொகையானது பெற்றோா்களின் பணிச்சுமையை குறைக்க உதவுகிறது.
அரசுப் பள்ளியில் நன்றாக படிப்போரை தோ்ந்தெடுத்து அரசு மாதிரிப் பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கு பயிற்சி வழங்கி திறன் மேம்படுத்தப்பட்டு, அவா்கள் பல்வேறு மாநிலங்களில் தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளில் அரசின் உதவியுடன் இலவசமாக படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு, அரசி நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் தினந்தோறும் காலை உணவு சாப்பிட்டு கல்வி பயின்று வருகின்றனா். கல்வியை யாராலும் திருட முடியாது. மனிதனுக்கு சிந்திக்கும் சக்தி கல்வி பயில்வதால் மட்டுமே வரும்.
ஆகவே அனைத்து மாணவா்களும் தொடா்ந்து கல்வி பயில வேண்டும். உங்களை படிக்க வைக்கும் பெற்றோரை மறக்க கூடாது. அவா்களை நன்றாக பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி, ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், மாவட்ட தொழில்மைய மேலாளா்ஆனந்தன், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், கல்லூரி தலைவா் ராமதாஸ், செயலாளா் தாமோதரன், வங்கி மேலாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.