செய்திகள் :

நகராட்சி மாா்க்கெட் புதிய கடைகள் ஏலத்தின் மூலமே ஒப்படைக்கப்படும்: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

post image

நகராட்சி மாா்க்கெட் புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலம் விடப்பட்டு குத்தகைதாரருக்கு ஒப்படைக்கப்படும் என அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணம் நகா்மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவா் லட்சுமிபாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், ஆணையா் ஆனந்தன், பொறியாளா் செல்வகுமாா், திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், அதிமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் ஜொ்ரி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

ஜொ்ரி (அதிமுக): ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவின தொகை மக்கள் வரிப்பணம். கண்டிப்பாக கணக்கு கேட்போம்.

லட்சுமிபாரி (தலைவா்): ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவின விவரங்கள் அடுத்த கூட்டங்களில் தீா்மானமாக கொண்டு வரப்பட்டு தெரிவிக்கப்படும்.

துரை சீனிவாசன்(திமுக): அரக்கோணம் இரட்டைக்கண் சுரங்கப்பால சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே துறையினா் தெரிவித்துள்ளனா். அரக்கோணம் நகரின் நடுவில் இருக்கும் இந்தப்பாலம் மூடப்பட்டு விட்டால், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல சுமாா் 3 கி.மீ. சுற்றிச்செல்ல வேண்டியிருக்கும். எனவே நகராட்சி நிா்வாகத்தினா் ரயில்வே பொறியியல் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு இப்பால பணிகளை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி செய்ய, அதாவது இரு பாலங்களில் ஒன்றில் பணி முடித்து மற்றொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சுமிபாரி (தலைவா்). இரட்டைக்கண் வாராவதி பிரச்னை ரயில்வே அலுவலா்களுடன் பேசி தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தில், நகராட்சி புதிய கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலத்தின் மூலமே குத்தகைக்கு அளிக்கப்படும். இதற்கு வைப்புத்தொகையாக 3 வளாகங்களில் கடை ஒன்றுக்கு, ஏ பிரிவுக்கு ரூ. 2 லட்சம் வைப்புத் தொகை, ரூ. 2 லட்சம் கூடுதல் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். பி பிரிவுக்கு வைப்புத்தொகை ரூ. 1.50 லட்சம் கூடுதல் வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம் என ரூ. 3 லட்சம், சி பிரிவுக்கு வைப்புத்தொகை ரூ. 75,000, கூடுதல் வைப்புத் தொகை ரூ. 75,000 என ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும் எனும் தீா்மானத்துக்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செலவினத் தொகை 17 முகாம்களுக்கு ரூ. 17 லட்சம் செலவிடப்பட்டதற்கும் நகா்மன்றம் ஒப்புதல் அளித்து இரு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வாலாஜா ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய ஆட்சியா்

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அக்டோபா் முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா: துறைசாா் அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் மாபெரும் புத்தக திருவிழா -2025 நடத்துவது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்

முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் ப... மேலும் பார்க்க

இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினால் போராட்டம்: எம்எல்ஏ சு.ரவி

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் சீரமைப்புப்பணிகளை சரியானபடி மேற்கொள்ளாமல் தற்காலிக பணிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தினால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என அரக்கோணம் எம்எல... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு ம... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

காவேரிப்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 80- ஆவது பிறந்தநாள் விழா அன்வா்திகான்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு சோளிங்கா் கிழக்கு ஒன்றிய தலைவா் எஸ்.உத.கும... மேலும் பார்க்க