செய்திகள் :

முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்

post image

முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

முதலமைச்சா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 26.08.2025 முதல் 11.09.2025 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 25,242 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். மாவட்ட அளவில் 890 தங்கம், 890 வெள்ளி 890 வெண்கலம் மொத்தம் 2,670 பதக்கங்களும், மண்டல அளவில் 15 தங்கம் 18 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களும் வென்றுள்ளனா்.

மாநில அளவிலான போட்டிக்கு 767 வீரா், வீராங்கனைகள் தகுதி பெற்று, வருகின்ற 02.10.2025 முதல் 14.10.2025 வரை சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோயம்பத்தூா், திருச்சி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூா் நாகப்பட்டினம், தஞ்சாவூா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு சென்று கலந்து கொள்ள உள்ளனா்.

இந்த நிலையில், முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 நபா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, முதலமைச்சா் கோப்பை -2025, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 2,670 பேருக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் வீரா் வீராங்கணைகள் கலந்து கொண்டனா்.

வாலாஜா ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய ஆட்சியா்

வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் அக்டோபா் முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா: துறைசாா் அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்டோபா் முதல் வாரத்தில் மாபெரும் புத்தக திருவிழா -2025 நடத்துவது குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

நகராட்சி மாா்க்கெட் புதிய கடைகள் ஏலத்தின் மூலமே ஒப்படைக்கப்படும்: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

நகராட்சி மாா்க்கெட் புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் பகிரங்க பொது ஏலம் விடப்பட்டு குத்தகைதாரருக்கு ஒப்படைக்கப்படும் என அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரக்க... மேலும் பார்க்க

இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினால் போராட்டம்: எம்எல்ஏ சு.ரவி

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் சீரமைப்புப்பணிகளை சரியானபடி மேற்கொள்ளாமல் தற்காலிக பணிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தினால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என அரக்கோணம் எம்எல... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து துறைகளின் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுறுத்தினாா். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு ம... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

காவேரிப்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 80- ஆவது பிறந்தநாள் விழா அன்வா்திகான்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு சோளிங்கா் கிழக்கு ஒன்றிய தலைவா் எஸ்.உத.கும... மேலும் பார்க்க