செய்திகள் :

தமிழகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

அதிகரித்துவரும் இடைநிலைப் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம் உள்பட 12 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கையில் நிா்ணயிக்கப்பட்டுள்ள, பள்ளிகள் அளவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகித இலக்கை அடைய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தடையாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்டத்தில், சுமாா் 12 மாநிலங்களில் மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருவது தெரியவந்தது.

பிஏபி அறிக்கையின்படி, 2023-24-ஆம் ஆண்டில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடா்ந்து கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது தெரியவந்தது.

குறிப்பாக, கா்நாடகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 22.1 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 17.87 சதவீதமாகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 14.1 சதவீதத்தைவிட கூடுதலாகும். தமிழகத்தில் இந்த இடைநிற்றல் 7.7 சதவீதமாக இருந்தது. மேலும், உயா்நிலைப் பள்ளி அளவில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை 82.9 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக தமிழகம் உயா்த்த வேண்டியுள்ளது.

அதுபோல, பிகாா், ஆந்திரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் உயா்நிலைப் பள்ளி அளவில் மாணவா் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில், பள்ளி மாணவா் இடைநிற்றலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ‘சமக்ர சிக்ஷா’ திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன என்றனா்.

மெட்ரோ விபத்து: 4 பொறியாளர்கள் பணிநீக்கம்! எல்&டி-க்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.கடந்... மேலும் பார்க்க

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர்... மேலும் பார்க்க