செய்திகள் :

தமிழகத்தில் பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

post image

தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மட்டுமே பதிவு பெற்றவையாக உள்ளதாகவும், பதிவு உரிமம் பெறாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம்பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும்.

இதற்காக 2018-இல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மட்டுமன்றி, சித்தா ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த காலகட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதாகத் தெரிகிறது.

இதனால், இதுவரை 38,188 மருத்துவமனைகள் மட்டுமே, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தில் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.

இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விண்ணப்பிக்காத மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதனையும் பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் - உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவுப் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் பயணம்!

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளார்.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னையில் ... மேலும் பார்க்க