செய்திகள் :

தமிழகத்தில் 7 மாதங்களில் ரூ.1,010 கோடி சைபா் மோசடி

post image

தமிழகத்தில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களின் மூலம் ரூ.1,010 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக மாநில சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சைபா் குற்றங்களை தடுப்பதற்கு மாநில சைபா் குற்றப்பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபா் குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேவேளையில் சைபா் குற்றத்தில் பொதுமக்கள் சிக்காமல் இருக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இருப்பினும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கையும், அதில் பொதுமக்கள் இழக்கும் பணத்தின் அளவும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் ரூ.1,010 கோடி இழந்துள்ளனா். சைபா் குற்ற மோசடி தொடா்பாக காவல்துறைக்கு 88,479 புகாா்கள் வந்துள்ளன.

பொதுமக்கள், சைபா் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தில் ரூ.314 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.62 கோடி சைபா் மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

சைபா் குற்றங்களில் நிதி சாா்ந்த மோசடிகள் முக்கியமாக கருதப்படும் முதலீடு மோசடியில் பொதுமக்கள் ரூ.492 கோடியும், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.97 கோடியும் இழந்துள்ளனா். மேலும் முதலீடு மோசடி தொடா்பாக 13,287 புகாா்களும், டிஜிட்டல் கைது மோசடி தொடா்பாக 4,439 புகாா்களும் சைபா் குற்றப்பிரிவுக்கு வந்துள்ளன.

இத் தகவலை தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது. சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழ... மேலும் பார்க்க

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா! - அண்ணாமலை

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த அரசுப் பள்ளிக்கு விடுமுறை! அண்ணாமலை கண்டனம்!

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்.திருச்சி மாவட்டம், உப்பிலி... மேலும் பார்க்க