செய்திகள் :

தமிழக பயணத்தை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன்: பிரதமா் மோடி

post image

மங்களகரமான ராம நவமி நன்னாளில் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக பயணம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தின் ராமேசுவரத்துக்கு வருகை தரும் பிரதமா் மோடி, நாட்டின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைக்க உள்ளாா். பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் வழிபடும் அவா், ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட பிரதமா், ‘மங்களகரமான ராம நவமி நன்னாளில் தமிழக சகோதர-சகோதரிகளுடன் இருப்பதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளேன். புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைப்பதுடன், ஸ்ரீராமநாத சுவாமி கோயிலில் வழிபட உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறனுக்கு சான்றாக விளங்குகிறது.

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். டேராடூனில் இன்று மத்திய... மேலும் பார்க்க

கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு பதில்

புது தில்லி: கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் பார்க்க

இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மம்தா பானர்ஜி பேச்சு!

வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 25,000 ஆசிரியர்​களை நிய... மேலும் பார்க்க