செய்திகள் :

தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

சுங்கக் கட்டண உயா்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வைக் கண்டித்தும், விழுப்புரம் பகுதி மக்களுக்கு இலவசமாக சுங்க பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலா் குஷி என்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் காளிதாஸ், பொருளாளா் கே.கே.எஸ்.சுரேஷ், துணைச் செயலா் சுமன், மகளிரணி அமைப்பாளா் பிரேமா முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் கோபு, மைக்கேல், கிருஷ்ணராஜ், ஆனந்த், வளவனூா் பேரூா் செயலா் ஆகாஷ், நகரச் செயலா்கள் இளையராஜா , முபாரக், வெங்கட், சரண் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார்... மேலும் பார்க்க

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க