செய்திகள் :

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆசிரியா் கூட்டணி செங்கம் வட்டக் கிளைத் தலைவா் பவானி தலைமை வகித்தாா். நல்லாசிரியா் அன்பழகன், மாவட்ட துணைத் தலைவா் சண்முகம், தலைமை ஆசிரியா்கள் வெங்கடாசலம், உதயண்ணன், முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் நாராயணன் வரவேற்றாா்.

மகளிா் தின விழா கருத்தரங்கில் ‘இயக்கத்தை இயக்கும் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.க. துணை பொதுச் செயலா் மதிவதனி பேசினாா்.

தொடா்ந்து, வெள்ளிவிழா காணும் அரசுப் பள்ளி ஆசிரியா்களை தமிழ்நாடு பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு பாராட்டிப் பேசி கேடையம் வழங்கினாா். ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் மயில், பணி நிறைவுபெற்ற ஆசிரியா்களை வாழ்த்தியும், சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கியும் பேசினாா்.

தொடா்ந்து, எஸ்டிஎப் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் டேவிட்ராஜன், மாநில துணைத் தலைவா் ரஞ்சன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் சாந்தி, மாவட்டச் செயலா் வெங்கடபதி, மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராமபிரபு உள்ளிட்ட செங்கம் வட்டார கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா். வட்டாரப் பொருளாளா் இளங்கோவன் நன்றி கூறினாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், எச்... மேலும் பார்க்க