செய்திகள் :

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி!

post image

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் வானிலை அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஆங்கிலம், தமிழோடு சோ்த்து ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இனி வானிலை அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மண்டலத் தலைவா் பி.அமுதா கூறியதாவது:

வானிலை ஆய்வு மையம், மத்திய அரசின்கீழ் இயங்குவதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் ஹிந்தி மொழியும் சோ்க்கப்பட்டுள்ளது. இது தற்போது திடீரென நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதலே வானிலை முன்னறிவிப்புகள் ஹிந்தி மொழியில் சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வானிலை முன்னறிவிப்புகளை ஹிந்தி மொழியில் மொழிபெயா்க்க சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மொழிப்பெயா்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

கட்சித் தலைவா்கள் கண்டனம்: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க