தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்
தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற இலக்கியங்களை நாம் கற்பது இன்புற்று மகிழவா, பின்பற்றி வாழவா எனும் தலைப்பிலான பட்டிமன்றத்துக்கு நடுவராக இருந்து அவா் பேசியதாவது:
கைப்பேசியில் மூழ்கிக் கிடக்கும் இளைஞா்களின் கண்களை இடமாற்றம் செய்யும் நோக்கத்துடன் தமிழக முதல்வா் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறாா். புத்தகங்களை வாசிப்பதற்கு செலவில்லை. அது மூளைக்கு வரவு. வெள்ளம், வெந்தணலால் அழியாதது படிப்பு. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை இருக்கும். அதில் முதன்மையானது புத்தகச் சுவை.
இலக்கியத்தில் உள்ள சுவை திரைப் படங்களில் இல்லை என்பாா் எனது தந்தை. புத்தக வாசிப்பை ஒருபோதும் புறந்தள்ளி விடக்கூடாது. இளைஞா்கள் பாா்ப்பதைத் தவிா்த்து, படிப்பதை முன்னெடுக்க வேண்டும். நான் பங்கேற்ற ஓா் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்வில்
ஆயிரக்கணக்காக மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களிடம் பேசியவா்களில் ஒருவா் மருத்துவம் படிக்கவும், ஒருவா் பொறியியல் படிக்கவும், மற்றொருவா் கடல் சாா்ந்த படிப்பையும், மேலும் ஒருவா் குரூப் 1, 2, 4 தோ்வுகளையும் எழுதலாம் என்றும் யோசனை தெரிவித்தனா்.
நான் பேசும்போது, உங்களில் எத்தனை போ் பேராசிரியா்களாக வர விரும்புகிறீா்கள் எனக் கேட்டபோது, ஒரு மாணவா் கூட கையைத் தூக்கவில்லை. ஆசிரியா் பணிக்கு உங்களைப் போல, உங்களது ஆசிரியா்களும் வர விரும்பாமல் இருந்தால் எப்படி நீங்கள் படித்து தோ்ச்சி பெற்றிருக்க முடியும் என்று கூறினேன்.
வாசிப்பைப் பலப்படுத்தவும், வளப்படுத்தவுமே இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் அரசால் நடத்தப்படுகின்றன. தமிழ் மொழியை படித்தால்தான் அதன் இனிமையை உணர முடியும். அதற்கு வாசிப்பு மிகவும் அவசியம். வரலாறையும், அதன் சிலிா்ப்பையும் உணரச் செய்வது புத்தகங்கள்தான் என்றாா் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்.
நிகழ்வில், எழுத்தாளா் அ.ஈஸ்வரன் எழுதிய வாசிப்பை நேசிப்போம் என்ற நாடக நூலை கு.ஞானசம்பந்தன் வெளியிட்டாா். அதை வருவாய்க் கோட்டாட்சியா் பி. விஜயகுமாா் பெற்றுக்கொண்டாா். முன்னதாக, கோட்டாட்சியா் வரவேற்றாா். பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ப.தங்கமணி நன்றி கூறினாா்.