செய்திகள் :

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு - திமுகவினர் மீது வழக்கு

post image

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “எங்களுக்கு மும்மொழி கொள்கை தேவையில்லை இருமொழி கொள்கை தான் எங்களின் கொள்கை.” என்று திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை

மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாகவும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக திமுக – பாஜக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி திமுக சட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையம் சென்றனர்.

பொள்ளாச்சி ரயில் நிலையம் இந்தி எழுத்து

பிறகு அவர்கள் அங்கிருந்த பெயர் பலகையில் பொள்ளாச்சி என்று இந்தி மொழியில் எழுதியதை கறுப்பு மையால் அழித்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதேபோல பாளையங்கோட்டை ரயில் நிலையத்திலும் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழித்தனர். இதனிடையே பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து, பெயர் பலகையை அழித்த காரணத்தால் திமுகவினர் மீது ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பொள்ளாச்சி ரயில் நிலையம்

மேலும் சிறிது நேரத்திலேயே புதிய பெயர் பலகையும் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க